ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

kaithu

காலி – கலோகான பகுதியில் ஒரு தொகை ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்த 25 கிராம் 800 மில்லிகிராம் அளவிலான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

கைதான சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதியினால் கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.