கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 2605 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.