வடக்குமாகாண கலாசார உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்திற்கு வன்னியிலிருந்து மூன்றுபேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
வடக்குமாகாண கலாசார உத்தியோகத்தர்களின் விசேட தரத்திற்கு வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த 202.12.21 ஆம் திகி நடாத்தப்பட்ட வடக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் நேர்முகத்தேர்விற்கமைய 2013.01.01 ஆம் திகதிமுதல் வலுப்பெறும் வண்ணம் கீழ்வரும் உத்தியோகத்தர்கள் பதவி உயர்விற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தி்ல் மாவட்ட கலாசார உத்தியோகத்தராக கடமைபுரியும் மாலினி கிருஸ்ணானந்தன், முல்லைத்தீவுமாவட்ட கலாசார உத்தியோகத்தராக கடமைபுரியும் இராமநாதன் மதியரசி,கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தராக கடமைபுரியும் சுகுணாளினி விஜயரத்தினம்,நெடுங்கேணி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரான இராஜதுரை லிங்கநாதன் ஆகியோர் இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.