சேதம் விளைவிக்கப்பட்ட தாதுசேனன் மன்னரின் பலதுவௌ வனப்பகுதி!

2940331d 495c 4dcd 86ac 151b769d5ca7
2940331d 495c 4dcd 86ac 151b769d5ca7

தாதுசேனன் மன்னரினால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் பலதுவௌ வனப்பகுதியில் பாரியளவான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆணையிறவு பகுதியும் டோசர் இயந்திரம் மூலம் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் யானைகளின் நடமாட்டத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பெறுமதிமிக்க மரங்களும் வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள சிலர்பலாகல பிரதேச சபையின் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்து இந்த தேவையற்ற நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.