வவுனியா கூமாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை வவுனியா காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த பெண் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக அவதானிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வவுனியா காவற்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான இளம் குடும்ப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.