நாடளாவிய ரீதியில் 20 மருத்துவமனைகளில் இன்று போராட்டம்

download 3 2 696x473 1
download 3 2 696x473 1

தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினமும் 20 வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

10 கோரிக்கைகளை முன்னிறுத்தி முன்னரான பல சந்தர்ப்பங்களில் போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சுகதானந்த தேரர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.