துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் இருவர் கைது

pi 1
pi 1

குஞ்சுக்குளம் காவல்துறை சோதனைச்சாவடியில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மடு காவல்துறை பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காவல்துறை சோதனைச்சாவடியில் மன்னாரில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தை (லொரி) மறித்து சோதனை மேற்கொண்ட போது நாட்டு துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சியுடன் வாகனத்தில் பயணித்த 34, 52 வயதுடைய இருவரும் நேற்று (18) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.