இன்று (19) காலை வரையான 24 மணி நேர காலப் பகுதிக்குள் நாட்டில் புதிதாக 674 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஏனைய நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 197 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 165 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 09 பேரும் ,வவுனியா மாவட்டத்தில் நால்வரும், திருகோணமலை மாவட்டத்தில் 07 பேரும் ,மன்னார் மாவட்டத்தில் இருவரும், யாழ். மாவட்டத்தில் ஒருவரும், புத்தளம் மாவட்டத்தில் இருவரும் ,கேகாலை மாவட்டத்தில் ஒருவரும் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 நபர்களும், கண்டி மாவட்டத்தில் 22 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.