கோப் குழுவுக்கு இரு புதிய உறுப்பினர்கள் நியமனம்

1581063166 parliment 2
1581063166 parliment 2

அரசாங்க நிதி பற்றிய குழுவில் இரு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று காலை(19) கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது அறிவித்தார்.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் குமார வெல்கம ஆகியோர் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு (கோப்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோப் குழு உறுப்பினர்களான ஹேஷா விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோரின் இராஜினாமாவினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.