முகக்கவசம் அணியத் தவறிய நபர்கள் மீது பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கும் மேற்கொண்ட போது இதுவரை 50 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்நிலையில், மேல்மாகாணத்தில் முகக்கவசம் அணியாத 2ஆயிரத்து 807 நபர்கள் மீது பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 50 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.