சட்டத்தரணிகளை காவற்துறைக்கு இணைத்துக்கொள்ளும் அதிகாரம் எனக்கு இல்லை – அலிசப்ரி

ali

சட்டத்தரணிகள் 150 பேரை காவற்துறை பரிசோதகர்களாக நான் இணைத்துக்கொள்ளப் போவதாக தெரிவிக்கப்படும் செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டத்தரணிகளை காவற்துறைக்கு இணைத்துக்கொள்ளும் அதிகாரமும் எனக்கு இல்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண, சட்டத்தரணிகள் 150 பேர் காவற்துறை பரிசோதகர்களாக இணைத்துக் கொள்ளப் போவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

மொழி அடிப்படையில் இணைத்துக்கொள்ளும் போது சிங்கள பிரதேசங்களுக்கு சிங்கள மொழி தெரிந்தவர்களும் சிறுபான்மை மக்கள் இருக்கும் பிரதேசங்களுக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களும் இணைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும் என்றே நினைக்கின்றேன். ஆனால் அனைத்து பிரதேசங்களுக்கும்  தமிழ், சிங்கள மொழியில் திறமையானவர்களை நியமிப்பதே நல்லது.

அத்துடன் காவற்துறை திணைக்களத்துக்கு சட்டத்தரணிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் நீதித்துறைக்கு எவ்வாறான அதிகாரம் இருக்கின்றது என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.