நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்!

Rainning
Rainning

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அநேக பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடுமெனவும் ஊவா மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடுமெனவும் அத்திணைக்களம் மேலும் தொிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மதியம் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.