காணாமல்போன இந்திய மீனவர்களில் இருவர் சடலங்களாக மீட்பு!

Dead2 0 3 1
Dead2 0 3 1

கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் படகு விபத்து காரணமாக காணாமல் போயிருந்த இந்திய மீனவர்களில் இருவருடைய சடலங்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை இலங்கைக் கடற்படையின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் நேற்று ஏற்பட்டிருந்த படகு விபத்தில் இந்திய மீனவர்கள் நால்வர் காணாமல்போயிருந்தனர்.

இந்தநிலையில், அவர்களில் இருவருடைய சடலங்கள் இன்று இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.