தவறான கருத்துக்களை சமூகத்தில் முன்னெடுத்து நாட்டை தவறாக வழிநடத்த வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கறுப்பு பட்டி அணியும் எதிர்கட்சி அரசியல் யாப்பிற்குட்பட்ட நாடாளுமன்றத்தில் இருப்பது கவலைக்குரிய நிலையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் மோசடிகாரர்கள் என்று கூறிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி குரல் கொடுத்து வருகின்றமை கவலைக்குரியதாகும்.
கொரோனா நிவாரணங்களை வழங்குவதற்காக 60ற்கும் அதிகமான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.