தொடருந்துகளில் யாசகத்தில் ஈடுபடுவது தடை

train 0
train 0

இன்று முதல் தொடருந்துகளில் யாசகத்தில் ஈடுபடுவதும், அவசியமற்ற வகையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

யாசகர்கள் மற்றும் அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பயணிகளிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இதற்கமைய, இன்று முதல் அவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.