சீமானின் பேச்சிற்கு யோகேஸ்வரன் கண்டனம்

yogeswaran
yogeswaran

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் அவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் நிறைவுற்றதன் பின்னரும் சீமான் போன்றோர் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது எனவும் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.