விடுமுறையில் வீடு திரும்பிய காவற்துறை அதிகாரி விபத்தில் உயிரிழப்பு!

jdj
jdj

வெலிகந்தை காவற்துறை பிரிவுக்குட்பட்ட கடவத்தமடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் காவற்துறை அதிகாரியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை காவற்துறை நிலையத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் ஹேரத் (வயது 35) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை காவற்துறை நிலையத்தில் இருந்து விடுமுறையில் தனது ஊரான குருணாகல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது வெலிகந்தை காவற்துறை பிரிவுக்குட்பட்ட கடவத்தமடு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மோதியே காவற்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் உயிரிழந்த காவற்துறை அதிகாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.