ஜனாதிபதி கோட்டாபய ஓர் சிறந்த நிருவாகி

angajan
angajan

எங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ புரட்சியாளனாக இல்லாமல் இருக்கலாம் , ஆனால் சிறந்தொரு நிருவாகி என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இன்று தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்ததாவது;

“சஜித் பிரேமதாசா என்பவருக்கு இருந்த மாபெரும் அலையையும் மீறி யாழ்பாணத்தில் விழுந்த 23,000 வாக்குகள் 250, 000 லட்சம் வாக்குகளுக்கு சமன்.

நாட்டில் எந்த ஜனாதிபதியும் செய்யாத மாற்றங்கள் இப்போது நடைபெறுகின்றன. இதனால் , மக்கள் மத்தியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

புரட்சியாளனை விட சிறந்த நிருவாகியே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

எங்களுக்கு அமைச்சு பதவி தரலை என குறை கூறுகிறார்கள். ஆனால் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவி கிடைத்துள்ளது. இதன் ஊடாக யாழ்.மாவட்டத்தை கட்டியெழுப்புவேன்.

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றே இவ்வளவும் செய்கிறேன். எதிர்காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக பாராளுமன்றுக்கு என்னை அனுப்பி வைப்பீர்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.