சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்வர்களுக்கு நிவாரணம்

cb.rathnayaga
cb.rathnayaga

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புகையிரதசேவை இராஜாங்க அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட வீதிகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு, இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வீதியை செப்பனிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.