வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 3
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 3


வவுனியாவில் நேற்றையதினம் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடைப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்கு  கடந்த சில தினத்திற்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஏனையவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு முடிவுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன. 

இதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட  16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றையதினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது