மட்டக்களப்பு குளங்களின் வான் கதவுகள் திறப்பு

batticaloa dam
batticaloa dam

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக உன்னிச்சை, உறுகாமம் உள்ளிட்ட குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், கட்டுமுறிவு, வெலிக்காக்கண்டி, புளுகுணாவை ஆகிய குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.