மன்னார் மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற வானிலையின் காரணமாக பல இலட்சம் பெறுமதியான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழையினால் வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் வயல் நிலங்களுக்குள்ளே தேங்கி காணப்படுவதால்
அனைத்து முளை நிலையில் உள்ள பயிர்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து நிவாரண உதவிகளை வழங்குமாறு பாதிக்கப்பட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.