மட்டக்களப்பு இருதயபுரம் புனித இருதயநாதர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயரமான பிரமாண்ட பனி மனித பொம்மை நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
இருதயபுரம் கிறிஸ்தவ வாலிப ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் பங்குத்தந்தை பேதுரு ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பனி மனித பொம்மை அருட்தந்தையினால் திறந்துவைக்கப்பட்டது.