ஜனாதிபதியின் உத்தரவு – வீதி வளைவு அகற்றம்

president wish
president wish

தனது வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து அமைக்கப்பட்டிருந்த வீதி வளைவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய அகற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நுழையும் பகுதியில் வளைவு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்திய பயணத்தினை முடித்துக்கொண்டு கொழும்பிற்கு வரும் வழியில் ஜனாதிபதி இந்த வளைவை அவதானித்துள்ளார்.

பின்னர், வளைவை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.