பழமை வாய்ந்த மடம் இடிந்து விழுந்துள்ளது

FB IMG 1575361906615
FB IMG 1575361906615

யாழ்ப்பாணம் – கோண்டாவில் ஆசிமட அரசடி விநாயகர் ஆலயத்தின் முன்பாக இருந்த பழமை வாய்ந்த மடம் மழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது.

நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாகவே குறித்த மடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

குறித்த மடமானது பல வருடங்களுக்கு முன்னர் ஆலயத்திற்கு வருபவர்கள், அப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வீதியால் சென்று வருபவர்கள் இளைப்பாறுவதற்கான அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்ட குறித்த மடத்தினை ஆலய நிருவாகம் தொடர்ந்து உரிய முறையில் பராமரித்து வந்திருந்த போதும், கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்ச்சியான மழையால் அம்மடம் இடிந்து வீழ்ந்துள்ளது.

பழமைவாய்ந்த குறித்த மடத்தினை மீண்டும் அதே இடத்தில் அமைக்க போவதாக அரசடி விநாயகர் ஆலய நிருவாகத்தில் பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர்.