கடத்தப்பட்ட சுவிஸ் அதிகாரி வெளிநாடு செல்ல தடை

awiss
awiss

சுவிசர்லாந்து தூதரக பெண் பணியாளர் எதிர்வரும் 9ம் திகதி வரை வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்துடன் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் பணியாளரை எதிர்வரும் 9ம் திகதிக்கு முன்னதாக குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில் குறித்த தூதரக ஊழியரிடமிருந்து ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டியிருப்பதால் பயணத் தடையை விதிக்குமாறு புலனாய்வாளர்கள் தலைமை நீதவான் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.