நாட்டில் மேலும் 706 பேருக்கு கொரோனா!

coronavirus.positive.1 768x384 1
coronavirus.positive.1 768x384 1

நாட்டில் நேற்றைய தினம் 706 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 704 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய இரண்டு பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 67,115 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,000 கடந்துள்ளது.

நேற்று மேலும் 684 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,567 ஆக அதிகரித்துள்ளது.