இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்க்களம் தெரிவித்துள்ளது.
சபரகமுவ மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மத்திய, சபரகமுவ, ஊவா மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலையில் பனிமூட்டம் நிலவும் வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது