வடக்கு ஆளுநராக நியமிப்பதற்கு தமிழர் ஒருவரைத் தாருங்கள்

gota1
gota1

வட மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க தான் தயாராக இருப்பதாகவும் அதற்கான சிறந்த ஒருவரை நபரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் 8 மாகாணங்களிற்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்திற்கான ஆளுநர் நியமனம் மாத்திரம் இழுபறி நிலையிலுள்ளது,

இந்நிலையில் சிங்களம், தமிழ், முஸ்லிம்கள் சார்பில் ஆளுநர்களை நியமிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார்.

அதன்படி சிங்களவர்கள் சார்பிலும், முஸ்லிம்கள் சார்பிலும் ஆளுநர்கள் நியமிக்கப்பட் போதிலும் தமிழ் மக்கள் சார்பில் தமிழ் பேசுகின்ற ஆளுநரை நியமிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

அதற்கிணங்க தமழர் ஒருவரை நியமிப்பதற்கு தான் தயாரா இருப்பதாகவும் அதற்கான சிறந்த ஒருவரை முன்வைக்குமாறு ஜனாதிபதி நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் கேட்டுக்கொண்டிருந்தார்.