அதிகாரியை சுவிஸ் கொண்டு செல்ல முயற்சி!!

dinesh gunaawardana
dinesh gunaawardana

கொழும்பிலுள்ள சுவிசர்லாந்து தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டமை காரணமாக மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வாக்குமூலம் அளிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக சுவிசர்லாந்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சுவிசர்லாந்து தூதரக பெண்ணிற்கு சிகிச்சையளிப்பதற்காக இலங்கையின் அனுமதியுடன் அம்புலன்ஸ் விமானத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்திருந்த போதிலும் அக்கோரிக்கையினை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சுவிஸ் துாதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற விடயத்தில் உண்மை இல்லை என்பது விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.