கல்வி மேம்பாட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியாக (முல்லைத்தீவு) மாவட்டம் இந்து புரம், கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இந்துபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வை பீனிக்ஸ் இளைஞர் கழக தலைவர் திரு லக்சீதரன், செயலாளர் ம .தங்கரூபன் மற்றும் பிரதான நிதி அனுசரணையாளர் எவ்.பீ.எம் குழு கனடா நிறுவனம் மற்றும் திருமதி முத்துலட்சுமி, பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.