கடத்தப்பட்ட சுவிஸ் அதிகாரியிடமிருந்து தகவல்களை பெற முடியவில்லை

ajith rohana
ajith rohana

கொழும்பிலுள்ள சுவிசர்லாந்து தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பிலான தகவல்களை குறித்த அதிகாரியிடமிருந்து எவ்வித தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியாமையினால் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா
அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை உடனடியாக மேற்கொண்டு உண்மையான விடயங்களை வெளியிட தாம் எதிர்பார்ப்பதாகவும் அதிகாரி கடத்தப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.