மாங்குளம் வடக்கு சனசமூக நிலையத்தாரின் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு!

FB IMG 1613049948056
FB IMG 1613049948056

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாங்குளம் வடக்கு சனசமூக நிலையத்தினரால் 10.02.2021 புதன்கிழமை மதியம் ஒரு மணியளவில் மாங்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 2020ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆறு மாணவர்கள் மற்றும் மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயத்திலிருந்து 2020ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவன் அத்துடன் சித்திவீதத்தை அடைந்த முப்பது மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் 2021ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மற்றும் க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மாங்குளம் வடக்கு சனசமூக நிலையத்தின் தலைவர் ஓய்வூபெற்ற கிராமசேவையாளர் திரு கு.சச்சிதானந்தமூர்த்தி தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உபதவிசாளர் திரு.க.ஜெனமேஜெயந் துணுக்காய் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு சஞ்சீவன் பிரதேச சபையின் செயலாளர் திரு ச.கிரிசாந்தன் ஒட்டுசுட்டான் கோட்டக்கல்வி அதிகாரி திரு.த.யோகானந்தராசா, வட்டார பிரதேச சபை உறுப்பினர் திரு செ.பிறேமகாந் மாங்குளம் ம.வி அதிபர் சண்முகரட்ணம் வித்தியாலய அதிபர் மற்றும் மாங்குளம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.