லுணுகல, எகிரியா பகுதியில் இன்று அதிகாலை 4.53 மணியளவில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லேகல மற்றும் ஹக்மன பகுதிகளிலும் இந்த நில அதிர்வு எதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 31 ஆம் திகதியும் எகிரியா பகுதியில் சிறிய நில அதிர்வு பதிவானமையும் குறிப்பிடத்தக்கது.