பாடசாலை காலத்திலிருந்தே சிறுவர்களை விளையாட்டுக்களில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆணைமடு கண்ணங்கர வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டதாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டின் இளைஞர்கள் வெளிநாட்டிற்கு சென்று பணியாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பல பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாத பிரிச்சினை காணப்படுகின்றது.
பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுக்களில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்
பிள்ளைகள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்றே பிள்ளைகளின் பெற்றோர்கள் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.