வடக்கு மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று

kethiswaran 300x251 1
kethiswaran 300x251 1

கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேருக்கு வடக்கு மாகாணத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்து
நர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்
குச் சென்றபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள்
பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சியில் ஒருவருக்கும், வவுனியாவில் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் மற்றையவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண் ஆகியோருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.