மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சிற்றூர்ந்து தீப்பற்றியுள்ளது

download 13 1
download 13 1

மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்ந்து ஒன்று இன்று(15) முற்பகல் தீப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்தது.

தீப்பரவல் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மருதானை – டீன்ஸ் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.