பாடசாலை மாணவன் விபத்தில் பலி

1026021 accident
1026021 accident

முதலாம் வகுப்பில் இணைவதற்கு இன்று (15) காலை தாயுடன் பாடசாலைக்கு சென்ற மாணவர் ஒருவர் பார ஊர்தி மோதி உயிரிழந்த சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது.

பதுளை – அசேலபுரவில் வசித்து வந்த வருண் பிரதீஷ் என்ற மாணவனே விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த தாய் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பாரவூர்தியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இது குறித்த மேலதிக விசாரணைகள் பதுளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன.