வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கான கால்கோள் நிகழ்வு

unnamed 6
unnamed 6

வடக்கு மாகாண மட்ட குழந்தைகளுக்கான பழமரத்தோட்டம் நிகழ்வும், தரம் ஒன்றுக்கான கால்கோள் நிகழ்வும் கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் இன்று காலை எட்டு முப்பது மணிக்கு இடம்பெற்றது.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன்,கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.