கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐவர் கைது

kaithu

சீதுவ, ரத்தொளுவ பகுதியில் ஒரு நபரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டவர்

மாகோனாவில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பெப்ரவரி 8 ஆம் திகதி கடத்தப்பட்டதாகவும், அவரது உடல் நிகவரெட்டிய பகுதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரைவான விசாரணைகளில் ஆரம்பத்தில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் பெற்றுக் கொண்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் ஏனைய நான்கு ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.