கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF
202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF

நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 172 கொவிட் நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அந்த மாவட்டத்தில் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 28,112 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், கம்பஹாவில் நேற்று பதிவான 168 நோயாளர்களுடன் அந்த மாவட்டத்தில் பதிவான தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 15,531 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 73 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 64 பேருக்கும், இரத்தினபுரியில் 64 பேருக்கும், பதுளையில் 30 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 25 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.

இதுதவிர, அம்பாறையில் 22 பேரும், மாத்தளையில் 18 பேரும், நுவரெலியாவில் 12 பேரும், அநுராதபுரத்தில் 17 பேரும் கொவிட் 19 நோயாளர்களாக பதிவான கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.