நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்த வகையில் நேற்றைய தினம் 20 மேற்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இதன்படி இதுவரை கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.