கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 430 ஆக அதிகரித்துள்ளது.

corona
corona

நாட்டில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 430 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 8 கொவிட் 19 மரணங்கள் நேற்றைய தினம் பதிவானதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர் கடந்த 16 ஆம் திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்தார்.

கொவிட்-19 நிமோனியா நிலை மற்றும் , தீவிர சிறுநீரக நோயும் இந்த மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு – 8 பகுதியை சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவர் கொவிட்19 தொற்றுறுதியாகி அநுராதபுரம் – மெத்சிறி செவன சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவர் உயிரிழந்தார்.

மீகொடை பகுதியை சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட்-19 நிமோனியா நிலையால் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

அதேநேரம் ரிதிமலியத்தை பகுதியை சேர்ந்த 20 வயதான யுவதி ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்தார்.

தீவிர நிமோனியா நிலை இந்த மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெகட்டன பிரதேசத்தை 52 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் மரணித்தார்.

கெவிட்19 நிமோனியா நிலை, தீவிர சீறுநீரக நோய் காரணமாக அவர் உயிரிழந்தார்.

கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் கடந்த 17 ஆம் திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா நிலை மற்றும் நுரையீரல் தொற்றால் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

அத்துடன் வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 74 வயதான பெண்ணொருவர் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட்19 நிமோனியா நிலை இந்த மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வத்தளை பகுதியை சேர்ந்த 81 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்தார்.

இதயம் மற்றும் சுவாசப்பை செயலிழப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.