முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள கொவிட்-19 வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 3,180 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள கொவிட் வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த இன்றைய தினமும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர்.