வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது

kaithu 1

வவுனியா ஒமந்தையில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது,

வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரினால் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது வல்லப்பட்டையுடன் 25 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்யப்பட்டு ஒமந்தை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனிடம் இருந்து 700 கிராம் வல்லப்பட்டை மீட்கப்பட்டுள்ளதுடன் இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்