மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

ee577fcd 25a8 438e 8ece 62fe382739eb
ee577fcd 25a8 438e 8ece 62fe382739eb

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிதரன் (வயது-30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

இன்று காலை அந்த வீதியூடாகப் பயணித்தவர்கள் பருத்தித்துறை காவல்துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.