மதத்தலைவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று கண்டியில் ஆரம்பமானது!

covishield 1
covishield 1

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி இன்று கண்டியில் உள்ள தேரர்கள் குழுவினருக்கு வழங்குவதன் மூலம் மதத்தலைவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

மதக்குருக்களுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு பிரதமர் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி கண்டியிலுள்ள புத்த பிக்குகளுக்கு தடுப்பூசி போடப்படுவதுடன் நாட்டிலுள்ள அனைத்து மதத் தலைவர்களையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.