வெளியானது ஐ.நா. பிரேரணை வரைவு; சர்வதேச நீதிமன்றப் பரிந்துரை இல்லை!

images 8
images 8

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையின் வரைவு வெளியாகியுள்ள நிலையில், அதில் சர்வதேச நீதிமன்றம் குறித்த பரிந்துரை இடம்பெறவில்லை.

இலங்கை தொடர்பான தீர்மானத்தின் உத்தேச வரைவு சர்வதேச நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் உள்ளடக்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வரைவில் தமிழர் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச நீதிமன்றம் தொடர்பான விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.