புதிய அரசியலமைப்பிற்கான தமது பரிந்துரைகளை மலையக மக்கள் முன்னணி இன்று சமர்ப்பித்துள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்த பரிந்துரைகள் புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுபான்மையை சேர்ந்த ஒருவரை நாட்டின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்தல் தொடர்பிலும் தமது பரிந்துரைகளில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.