ஹட்டனில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
ஹட்டன் மென்டிஸ் மாவத்தையில் மூன்று பேருக்கும் பிரவுன்ஸ் வீதியில் மூன்றும் பேரும் வில்பர்ட்புரம் பகுதியில் மூன்று பேருக்குமாக 9 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட இருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இவ்வாறு இனங்காணப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார்.